இணுவில் செய்திகள்

இணுவிலில் ஈழ வரலாற்றுச் சரித்திரப் புனை நாவல் நூல் வெளியீட்டு விழா!

இணுவிலான் சிகாகோ பாஸ்கரனின் ஈழ வரலாற்றுச் சரித்திரப் புனை நாவலான “இணையிலான்” நூல் வெளியீட்டு விழா இணுவில் கந்தசுவாமி கோவில் வடக்கு வீதியில் இருக்கும் இளந்தொண்டர் சபை அரங்கில் நாளை 24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.

ஈழத்தின் புராதன வரலாற்றுத் தரவுகளோடு இதுவரை புனைவுக்கதைகளாக அறியப்படாத கோணத்தில் இணையிலான் நாவலை எழுதியிருக்கின்றார் பாஸ்கரன் அவர்கள். அதுமட்டுமல்ல மிக கட்சிதமாக இணையிலானை தமிழ் மக்களின் தேசிய தலைவருடைய சாயலிலும் அவர் போன்றதொரு வரலாற்றுத் தலைவனாகவும் வாழ்விலும் வீரச்சாவிலும் கூட இணைத்து விட்டிருக்கின்றமை எழுத்தாளரின் அதீத தமிழ்ப் பற்றும் ஈடுபாடுமே.

தன்னுடைய இணுவில் மண்ணும் ஈழவரலாற்றில் இணைந்த ஒரு ஊர் எனத்தெரிந்தும் அதனை பற்றிய அவரின் தேடலே இந்த நூல் உருவான காரணங்களில் ஒன்றாகின்றது என குறிப்பிடுகின்றார்.

இணுவையூர் குமரநர்த்தனாலய மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகும் நிகழ்ச்சிக்கு செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் அவர்கள் ஆசியுரையும் ஈழவாணி அவர்கள் வாழ்த்துரையும் பாலச்சந்திரன் அவர்கள் தலைமையுரையும் வழங்க இருக்கின்றனர்.

கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் அவர்கள் நூலினை வெளியிட்டு சிறப்புரை வழங்க இருக்கின்றார். நூலின் அறிமுக உரையினை ஆசிரியர் மகாலிங்கசிவம் அவர்களும் மதிப்பீட்டு உரையினை பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்களும் வழங்க இருக்கின்றார்கள்.

சிறப்பு விருந்தினர் உரையினை வாழ்நாள் பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா அவர்கள் வழங்க இருக்கின்றார்.

நிகழ்ச்சியினை பிரபாகரன் வத்சாங்கன் தொகுத்து வழங்குகின்றார்.

நாளை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற இருக்கும் நூல்வெளியீட்டு விழாவுக்கு அனைவரும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் நூலாசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0Shares

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?