சிவஸ்ரீ சோமாஸ்கந்தக்குருக்களின் உடல் தீயில் சங்கமம்!
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சோமாஸ்கந்தக்குருக்கள் கடந்த வெள்ளியன்று (15.10.2021) இறைபதம் அடைந்திருந்தார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்றையதினம் (19.10.2021) அவரின் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிகைக்காக தாவடி இந்துமயானம் எடுத்துச் செல்லப்பட்டு உடல் அக்கினியில் சங்கமம் ஆனது.
அன்னாரின் இறுதிக் கிரிகையிலும் இறுதி ஊர்வலத்திலும் சமய பெரியார்கள், அந்தண சிவாச்சாரியார்கள் , பரராஜசேகர விநாயக அடியார்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.
சுகாதார நடைமுறைப்படி ஆரவாரங்கள் இல்லாது மிகவும் அமைதியான முறையில் இறுதி ஊர்வலம் நடைபெற்று முடிந்திருக்கின்றது.
Deep condolences to his family. Very sad news .