
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை இராசரத்தினம் (தொழிலதிபர் N.A.R & Co) அவர்கள் 06.12.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராசா கண்மணி தம்பதிகளின் மருமகனும், பரஞ்சோதியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், துரைராசா, சந்திரராசா மற்றும் இரத்தினமணி, மல்லிகாதேவி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணலட்சுமி, சுமத்திராதேவி, காலஞ்சென்றவர்களான சந்திரவதி, இராசரத்தினம், தர்மராசா மற்றும் வசந்திராதேவி ஆகியோரின் மைத்துனரும்,
கிருபாமூர்த்தி(நோர்வே), கருணாமூர்த்தி(கனடா), சத்தியமூர்த்தி(லண்டன்), ஜெயாமூர்த்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோதிசொரூபினி, சுஜந்தா, சிவந்தினி, ஸ்ரீ றஜனி ஆகியோரின் மாமனாரும்,
சஹானா+நிஷாந், சாரங்கா, நர்த்தகி, அஜய், அபிராமி, ஹரிஸ், ஸாணுஹா, அபிசுதன், அபிநயன் ஆகியோரின் பேரனும் ஆத்யாவின் பூட்டனுமாவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 09.12.2022 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் முற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்று தகனக் கிரியைகளுக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இணுவில் தெற்கு
இணுவில்
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு 0775052632 / 0214921908
குறிப்பு :- உங்களுடைய உறவுகளின் மரண அறிவித்தல்கள் இணுவையூர் இணையத்தளத்தில் பிரசுரிக்க Inuvaiyur@gmail.com
அல்லது வலது மூலையில் காண்பிக்கும் Whats App மூலம் தொடர்பு கொள்ளவும்.