இணுவிலில் சித்திரைப் பெருவிழா தமிழிசை அரங்கு காண வாரீர்!
இணுவில் அறிவாலயத்தில் சித்திரைப் பெருவிழாவாக தமிழிசை அரங்கு நடைபெற இருக்கின்றது. சனிக்கிழமை 15.04.2023 அன்று அறிவாலயத்தின் தலைவர் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் தலைமையில் இணுவில் அறிவாலய மண்டபத்தில் மாலை 04.00 மணிக்கு நடைபெற இருக்கின்றது.
வாழ்த்துரையினை கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் வழங்க இருக்கின்றார். தமிழிசை அரங்கில் இணுவில் அறிவாலய போசகர்கள் வைத்தியர் க.பாலசுப்ரமணியம், த.கந்தசாமி, நா.சுந்தரலிங்கம் போன்றோர் முன்னிலைபடுத்தப் படுகின்றனர்.
தமிழிசை அரங்கில் சிறப்பு நிகழ்வாக இணுவைத் தமிழ்ச் சங்கத்தின் பட்டிமன்ற நிகழ்வும் இணுவையூர் அழகேசன் மைந்தர்களின் தமிழிசையும் நடைபெற இருக்கின்றது.
அனைவரும் வருக!
சித்திரைப் பெருவிழாவில் மகிழ்க!