இணுவில் அறிவாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சித்திரை பெருவிழா!
இணுவில் அறிவாலயத்தில் சித்திரை பெருவிழா தமிழிசை அரங்கு 15.04.2023 சனிக்கிழமை அன்று அறிவாலயத்தின் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் அறிவாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
தமிழிசை அரங்கில் வாழ்த்துரையினை கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் அவர்கள் வழங்கியிருந்தார்.
தமிழிசை அரங்கில் முக்கிய நிகழ்வுகளாக இணுவைத் தமிழ்ச் சங்கம் பட்டிமன்ற நிகழ்வும் இணுவையூர் அழகேசன் மைந்தர்கள் தமிழிசையும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அறிவாலயத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஊர் மக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
முழுமையான புகைப்படத் தொகுப்பு