இணுவில் செய்திகள்

இணுவில் வாழ் 20 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி!

மூன்றாவது தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தில் இணுவிலில் வசிக்கும் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு நாளை (06.01.2022) வியாழக்கிழமை மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளாக சீனாவின் சினோபோம் தடுப்பூசியானது வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக ஜேர்மனி மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தயாரிப்பான பைசர் தடுப்பூசியானது வழங்கப்பட இருக்கின்றது.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதங்கள் கடந்தவர்களுக்கு மாத்திரமே இவ் மூன்றாவது தடுப்பூசியானது வழங்கப்பட இருக்கின்றது.

இவ் தடுப்பூசியானது இணுவில் ஆரம்ப சுகாதார மருத்துவ பிரிவில்(இணுவில் டிஸ்பென்சரி) 6 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மதியம் 12.30 மணி வரை வழங்கப்பட இருக்கின்றது.

இணுவில் கிராம சேவையாளர் பிரிவுகளான யா/188 , யா/189 , யா/190 , யா/191  ஆகிய பிரிவுகளில் வசிக்கும் 20 வயதிற்கும் 30 வயதிற்கு இடைப்பட்ட இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் தவறாது கலந்து கொண்டு உங்களுக்கான மூன்றாவது தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இணுவில் மக்களுக்கு வியாழக்கிழமை ஒருநாள் மாத்திரம் இணுவில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவில் தடுப்பூசி வழங்கப்படுவதனால் இச்சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0Shares

Leave a Reply

எம்மைத் தொடரவும்

முகநூலில் தொடர யூடியூப்பில் தொடர
error: Content is protected !!
Open chat
1
எங்களை தொடர்பு கொள்ள?
வணக்கம் இணுவில் இணையத்தளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்!
நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?

Hello!
How Can I Help You?